Monday, November 15, 2010

மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் டிசமபர் 3ம் தேதிக்கு திரையிடப்படுகிறது.


அனைவருக்கும் வேண்டுகோள்!
எப்படிப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு இதுவரை திரையிடப்படாத இந்தப் படமே சாட்சி. சமூகம் குறித்து அக்கறை கொண்ட யாவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி இது!
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வராமல் இருந்த ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம் டிசமபர் 3ம் தேதிக்கு திரையிடப்படுகிறது. மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு இப்படியொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. படம் வெளியாகி, விருதுகளும் பெற்று பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்தப் படத்திற்கு தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் செய்திகளோ, விளம்பரங்களோ நிச்சயம் வரப்போவதில்லை. இந்தப் படம் ஒடுகிறதா, வசூல் செய்கிறதா என்றெல்லாம் அவ்ர்கள் கவலைப்படவும் போவதில்லை.
இந்தப் படம் கவனிப்பாரற்றுப் போவதில் அம்பேத்கருக்கு எந்த அவமானமும் இல்லை. இதையெல்லாம் விட எவ்வளவோ அவமானங்களை அவர் வாழும்போதே பார்த்தவர். இந்த தேசத்துக்குத்தான் அவமானம்.
நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்படம் குறித்த தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பரவலாக்குங்கள். சமூகத்தின் மனசாட்சியிடம் பேசுங்கள்

No comments:

Post a Comment