Tuesday, December 6, 2011

Tuesday, November 29, 2011

Saturday, November 26, 2011

தமிழும் கடலும்



தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-



கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா-மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.
கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kalingatamil@yahoo.co.in

நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள்.

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.

Saturday, November 5, 2011

ஆயிரம் உண்டிங்கு சாதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 5. சீர்மரபினர் பட்டியல் 6. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்
4. அஜிலா
5. அருந்ததியர்
6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. பைரா
8. பகூடா
9. பண்டி
10. பெல்லாரா
11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
12. சங்கிலியர், சக்கிலியன்
13. சாலாவாடி
14. சாமார், மூச்சி
15. சண்டாளா
16. செருமான்
17. தேவேந்திர குலத்தார்
18. டோம், தொம்பரா, பைதி, பானே
19. தோம்பன்
20. கொடகலி
21. கொடடா
22. கோசாங்கி
23. ஹொலையா
24. ஜக்கலி
25. ஜம்புவுலு
26. கடையன்
27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. கல்லாடி
29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
30. கரிம்பாலன்
31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
32. கோலியன்
33. கூசா
34. கூத்தன், கூடன்(கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
35. குடம்பன்
36. குறவன், சித்தனார்
37. மடாரி
38. மாதிகா
39. மைலா
40. மாலா
41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. மாவிலன்
43. மோகர்
44. முண்டலா
45. நலகேயா
46. நாயாதி
47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
48. பகடை
49. பள்ளன்
50. பள்ளுவன்
51. பம்பாடா
52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
53. பஞ்சமா
54. பன்னாடி
55. பன்னியாண்டி
56. பரையன், பறயன், சாம்பவார்
57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
59. புலையன்
60. புதிரை வண்ணான்
61. ராணேயர்
62. சாமாகாரா
63. சாம்பான்
64. சபரி
65. செம்மான்
66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. தோட்டி
68. திருவள்ளுவர்
69. வல்லோன்
70. வள்ளுவன்
71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. வாத்திரியன்
73. வேலன்
74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
75. வெட்டியான்
76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

பழங்குடியினர் பட்டியல்
1. ஆதியன்
2. ஆரநாடான்
3. எரவள்ளன்
4. இருளர்
5. காடர்
6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
7. காணிக்கர், காணிக்காரன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
8. கணியர், காணியான், கணியன்
9. காட்டு நாயகர், காட்டு நாயகன்
10. கொக்கவேலன்
11. கொண்டகாப்புகள்
12. கொண்டாரெட்டிகள்
13. கொராகா
14. கோடா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
15. குடியா, மேலக்குடி
16. குறிச்சன்
17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
18. குறுமன்கள்
19. மகாமலசார்
20. மலை அரையன்
21. மலைப் பண்டாரம்
22. மலை வேடன்
23. மலைக்குறவன்
24. மலசார்
25. மலயாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
26. மலயக்கண்டி
27. மன்னன் (சாதி)
28. மூடுகர், மூடுவன்
29. முதுவர், முத்துவன்
30. பள்ளோயர், பள்ளேயன்
31. பள்ளியன்
32. பள்ளியர்
33. பாணியர்
34. சோலகா
35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
36. உரளி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்
1. தொழுவ அல்லது துளுவவெள்ளாளர் உடபட அகமுடையார்
2. அகரம் வெள்ளாஞ் செட்டியார்
3. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
4. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நீங்கலாக)
5. அன்சார்
6. அரயர், நுலயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
7. அர்ச்சகர வேளாளர்
8. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
9. ஆயிர வைசியர்
10. படகர்
11. பில்லவா
12. பொண்டில்
13. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் நீங்கலாக), பெத்தபோயர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை நீங்கலாக), ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக), கல் ஒட்டர்கள் (காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் நீங்கலாக), நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர்,திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக), சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் நீங்கலாக)
14. சக்காலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)
15. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
16. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி, வேலூர் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
17. சௌத்திரி
18. கல்வி நிலையங்களில் இருக்கைகள் மற்றும் அரசுப்பணிகளின் இருக்கைக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக தலைமுறையைப் பொருட்படுத்தாமல் ஆதிதிராவிடர் வகுப்பினர்களிலிலிருந்து கிறித்துவராக மாறியவர்கள்.
19. தென்னிந்திய திருச்சபை (முன்னாள் தெ.இ.கி.ஒ) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
20. தொங்க தாசரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை,நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள் நீங்கலாக)
21. தக்கானி முஸ்லீம்கள்
22. தேவாங்கர், சேடர்
23. தொம்மார்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), தோமர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
24. துதிகுலா
25. ஏனாதி
26. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
27. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
28. எழுவா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
29. கங்கவார்
30. கவரா, கவரை மற்றும் வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும் ரெட்டி இல்லாத பிற)
31. கௌண்டர்
32. கௌடா (கம்மாளர், கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
33. ஹெக்டே
34. இடிகா
35. இல்லத்துப்பிள்ளைமார், இள்ளுவர், எழுவர், இல்லத்தார்
36. ஜெட்டி
37. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் நீங்கலாக)
38. கப்போரா
39. கைக்கோளர், செங்குந்தர்
40. காலாடி (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலுர் மாவட்டங்கள் நீங்கலாக)
41. களரி குரூப், களர் பணிக்கர் உட்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
42. கலிங்கி
43. கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வ கோட்டை கள்ளர்கள் உட்பட (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) கூத்தப்பால் கள்ளர்கள் (புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நீங்கலாக), பிரமலைக் கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் நீங்கலாக), பெரிய சூரியர் கள்ளர்கள் ( திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக)
44. கள்ளர் குலத் தொண்டைமான்
45. கால்வேலிக் கௌண்டர்
46. கம்பர்
47. கம்மாளர் அல்லது விஸ்வகர்மா (விஸ்வகர்மாலா, தட்டார், பொற்கொல்லர், கன்னார், கருமார், கொல்லர், தச்சர்,கல்தச்சர், கம்சாலா மற்றும் விஸ்வபிராமணர் உட்பட)
48. கணி, கணிசு, கனியர், பணிக்கர்
49. கனியால வேளாளர்
50. கன்னட சைனீகர், கன்னடியார் (மாநிலம் முழுவதும்) மற்றும் தசபலான்ஜிகா (கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)
51. கன்னடியநாயுடு
52. கற்பூர செட்டியார்
53. கரூணீகர் (சீர் கருனீகர், ஸ்ரீ கருணீகர், சரடு கரூணீகர், கைகட்டிக் கரூணீகர், மாத்து வழ கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்பு கரூணீகர்)
54. காசுக்கார செட்டியார்
55. கடேசர், பட்டம்கட்டி
56. கவுத்தியர்
57. கேரளமுதலி
58. கார்வி
59. கத்ரி
60. கொங்கு வைணவர்
61. கொங்கு வேளாளர்கள்(வெள்ளாளக் கௌண்டர், நாட்டுக் கௌண்டர், நரம்புக் கட்டிக் கௌண்டர், திருமுடி வேளாளர்,தொண்டு வேளாளர், பாலக் கௌண்டர், பூசாரிக் கௌண்டர், அனுப்ப வேளாளக் கௌண்டர், குரும்பக் கௌண்டர்,படைத்தலைக் கௌண்டர், செந்தலைக் கௌண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கௌண்டர், பால வெள்ளாளக் கௌண்டர், சங்கு வெள்ளாளக் கௌண்டர் மற்றும் ரத்தினகிரிக் கௌண்டர் உடபட)
62. கோப்பல வேலம்மா
63. கோட்டேயர்
64. கிருஷன்வாகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
65. குடிகார வேளாளர்
66. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
67. குக வேளாளர்
68. குஞ்சிடிகர்
69. லப்பைகள் இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது ஆக இருப்பினும்)
70. லம்பாடி
71. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
72. லிங்காயத் (ஜங்கமா)
73. மராட்டிய (பிராமணரல்லாதோர்) நாம்தேவ் மராட்டியர் உட்பட
74. மலயர்
75. மாலி
76. மானியகார்
77. மாப்பிள்ளா
78. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் நீங்கலாக) கருமறவர்கள், அப்பனாடு கொண்டையம் கோட்டை மறவர் உட்பட (சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் செம்பனாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் நீங்கலாக)
79. மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள்
80. மூப்பன்
81. முத்துராசா, முத்துராச்சா, முத்திரியர், முத்தரையர்
82. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்துவ நாடார், கிறித்துவ சாணார் மற்றும் கிறித்துவ கிராமணி உட்பட)
83. நகரம்
84. நாயக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
85. நன்குடி வேளாளர்
86. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
87. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
88. ஓதியா
89. ஊற்று வளநாட்டு வேளாளர்
90. ஓ.பி.எஸ்.வேளாளர்
91. உவச்சர்
92. பய்யூர் கோட்ட வேளாளர்
93. பாமுலு
94. பாணர் (இந்த இனம் ஆதிதிராவிட வகுப்பினர்களாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
95. பாணிசைவன் (வீரக்கொடி வெள்ளாளர் உட்பட)
96. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கதிகாரர்
97. [பன்னிரண்டாம் செட்டியார்]] அல்லது உத்தமச் செட்டியார்
98. பார்க்கவகுலம் (சுரிதிமார், நத்தமார், மலைமார், மூப்பனார், நைனார் உட்பட)
99. பெருக்கி (பெரிகே, பலிஜா உட்பட)
100. பெரும்கொள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
101. பொடிகார வேளாளர்
102. பூலுவ கவுண்டர்
103. பொராயா
104. புலவர்(கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்)
105. புள்ளுவர் அல்லது பூலூவர்
106. புசலா
107. ரெட்டி (கஞ்சம்)
108. சாதுச் செட்டி (தெலுங்குச் செட்டி, இருபத்து நான்கு மனைத் தெலுங்குச் செட்டி உட்பட)
109. [[சக்கரவார்] அல்லது கவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
110. சாலிவாகனா
111. சாலியர், பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர் மற்றும் அடவியர்
112. சவலக்காரர்
113. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்
114. ஷேக்
115. சௌராட்டிரா (பட்டுநூல்காரர்)
116. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர்)
117. ஸ்ரீசயர்
118. சுந்தரம் செட்டி
119. சையத்
120. தொகட்டா வீரசத்திரியர்
121. தொல் கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
122. துளவ நாய்க்கர் மற்றும் வெத்தலக்கார நாய்க்கர்
123. தொரையர்
124. தோரியர்
125. உக்கிரகுல சத்திரிய நாயக்கர்
126. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா
127. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு,திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
128. உரிக்கார நயக்கர்
129. வல்லம்பர்
130. வால்மீகி
131. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டல், கனிகா, தெலிகுல செக்கலார் உட்பட)
132. வேடுவர் மற்றும் வேடர் (இச்சமூகத்தினர் ஆதிதிராவிடராக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
133. வீர சைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
134. [வேளர்]]
135. வெள்ளாஞ்செட்டியார்
136. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
137. வொக்கலிகர் (வக்கலிகர், ஒக்காலிகர், கப்பிலியர், ஒக்கலிக கௌடா, ஒக்காலியா கௌடா, ஒக்காலிய கவுடர்,ஒக்காலிய கவுடா உட்பட)
138. வயநாடு செட்டி (நீலகிரி மாவட்டம்)
139. யாதவா (இடையர், வேடுக ஆயர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா மற்றும் அஸ்தந்திர கொல்லா என அழைக்கப்படுகிற தெலுங்கு மொழி பேசும் இடையர் உட்பட)
140. யவன
141. ஏருகுலா
142. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர், முக்குவார் அல்லது மூகையர் மற்றும் பர்வரிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் நீங்கலாக எந்த ஒரு இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர்கலிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள்.
143. 10 வயதுக்கு முன்பு பெற்றோர்களை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள். சட்டப்படியோ அல்லது வழக்கமாகவோ எவர் ஒருவரும் அவர்கள் மீது அக்கறை கொள்ளாதவர்கல் மற்றும் அரசால் ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள்.

மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்
1. அம்பலக்காரர்
2. ஆண்டிப்பணடாரம்
3. பெஸ்தா, சீவியர்
4. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
5. போயர், ஒட்டர்
6. தாசரி
7. தொம்மரா
8. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
9. இசை வேளாளர்
10. ஜம்புவானோடை
11. ஜங்கம்
12. ஜோகி
13. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும்)
14. கொரச்சா
15. குலாலா (குயவர், கும்பரர் உள்ளிட்ட)
16. குன்னுவர் மன்னாடி
17. குறும்பர்
18. குறு உறனி செட்டி
19. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
20. மோண்ட் கொல்லா
21. மவுண்டாடன் செட்டி
22. மகேந்திரா, மேதரா
23. முட்டலகம்பட்டி
24. நரிக்குறவர்
25. நோக்கர்
26. வன்னிய குலச் சத்திரியர்(வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
27. பரவர்,பரதவர்,பரதர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
28. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டனவார், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
29. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
30. புன்னன், வேட்டுவ கௌண்டர்
31. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
32. . சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
33. சோழிய செட்டி
34. தெலுங்குப் பட்டி செட்டி
35. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
36. தொண்டைமான்
37. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
38. வண்ணார்(சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் ஆதிதிராவிட வகுப்பினராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
39. வேட்டைக்காரர்
40. வேட்டுவக் கௌண்டர்
41. யோகீஸ்வரர்

சீர்மரபினர் பட்டியல்
1. ஆத்துர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்)
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
3. அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
4. அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
5. அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6. போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
7. பட்டுதுர்காஸ்
8. சி.கே.குறவர்கள் (கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
9. சக்கலா (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள்)
10. சங்கயம்பாடி குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
11. செட்டிநாடு வலையர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்)
12. தொம்பர்கள்(புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்)
13. தொப்ப குறவர்கள் (சேலம், நாமக்கல் மாவட்டங்கள்)
14. தொம்மர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
15. தொங்கபோயர்
16. தொங்கஊர் கொறச்சார்கள்
17. தேவகுடி தலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
19. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
20. தொங்கதாசரிகள் (கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
21. கொரில்லா தோட்ட போயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வ கோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்)
24. கந்தர்வ கோட்டை கள்ளர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
25. இஞ்சிக் குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்புதுக்கோட்டை மாவட்டங்கள்)
26. ஜோகிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
27. ஜம்பவனோடை
28. காலடிகள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
29. கல் ஒட்டர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி,திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
30. குறவர்கள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி,திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்)
31. களிஞ்சி தாபி குறவர்கள்(தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
32. கூத்தப்பால் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
33. கல குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் (காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
36. மறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
39. முடலகம்பட்டி (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
40. நோக்கர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
41. நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
42. ஒட்டர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்)
43. பெத்த போயர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
44. பொன்னை குறவர்கள் (வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்)
45. பிரமலைக்கள்ளர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
46. பெரிய சூரியூர் கள்ளர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
47. படையாட்சி (கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன் குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்)
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
49. சேர்வை (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
50. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி,கரூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
51. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் (வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
53. சாரங்கபள்ளி குறவர்கள்
54. சூரமாரி ஒட்டர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
55. செம்பநாடு மறவர்கள் (சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்)
56. தல்லி குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
57. தெலுங்குபட்டி செட்டிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
58. தொட்டிய நாயக்கர்கள் (சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல்,வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்)
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை,தேனி, திண்டுக்கல், வேலுர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர்கள் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
62. வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி,தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
64. வலையர்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்)
65. வேட்டைக்காரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
66. வெட்டா குறவர்கள் (சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்)
67. வரகநேரி குறவர்கள் ((திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)

இதர வகையினர்
மேற்கண்ட பட்டியலில் இல்லாத அனைத்து சாதியினரும் முற்பட்ட வகுப்பினராகவும், இதர வகையினராகவும் உள்ளனர்.
ஆதாரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட கையேடு (நாள்: 30-10-2006)
nandri  makizhnan  

Monday, September 26, 2011

பசுமைதாய்க்கு அஞ்சலி

40  மில்லியன் மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , சுற்று சூழல் சீர்கேடு குறித்து அதீத அக்கறை கொண்டவர் .கென்யா நாட்டை சேர்ந்தவரான மாத்தாய் , ஒரு பேராசிரியராக ,அரசியல் வாதியாக ,பசுமைதாயாக   பன்முகத்தன்மையோடு , பசுமைக்கும் ,மானுட வர்கத்தின் மேன்மைக்கு பாடாற்றினார் .


அவரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாக : 

  • 1940: கென்யாவில் உள்ளா கேரி என்கிற கிராமத்தில் பிறந்தார் 
  • 1964: அமெரிக்க பல்கலை கழகத்தில் இளங்கலை உயிரியல் பயின்றார்
  • 1966: முதுகலை அறிவியலை , பிட்ஸ் பெர்க் பலகலைகழகத்தில் பயின்றார்
  • 1971: நைரோபி பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்  ,கிழக்கு  ஆசியாவிலேயே  முனைவர் பட்டம் பெற்ற  முதல் பெண்மணி இவரே  
  • 1997: தனது "பசுமை வளைய இயக்கம்  (Green Belt Movement  ) நிறுவினார்
  • 2002: கென்யா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  • 2004: சமாதானத்திற்கான நோபெல் பரிசு வென்றார் .
  • 2011: செப்டம்பர் 25  அதிகாலை தனது 71  வது வயதில் இயற்கையோடு கலந்து போனார் .


மரம் ,மனிதம் ,இரண்டிற்காகவும்
தன்னை அர்பணித்த அந்த பசுமைதாய் இன்று 25 / 09 / 2011  அன்று  புற்று நோயினால் இறந்து போனார் .இல்லை இயற்கையோடு இரண்டற கலந்து  போனார் .

Monday, September 19, 2011

அணு மின் நிலையம் அவசியம்தானா ?

ஹீரா ஷிமா , நாகசாகி , செர்நோபில் ,அமெரிக்காவின் மூன்று மைல் தீவு ,இந்தியாவில் நரோரா ஆகிய நகரங்களில் நடந்த அணு உலை விபத்து மற்றும் வெடிப்பை  தொடர்ந்து , உலகமே இன்று அணுகுண்டு , அணு பயன்பாட்டில் விளையும் ஆற்றல் குறித்து எதிர்ப்பும் ,மறுப்பும் தெரிவித்து வருகிற நிலையில் தமிழகத்தில், நெல்லை மாவட்டம் ,கூடங்குளத்தில் ,13 ,171  கோடி மதிப்பில் செயல் பட இருக்கிற அணு உலைக்கு அரசியல் தலைவர்கள் ,மற்றும் ,சமூக ஆர்வலர்கள் ,பொது மக்களிடயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது .இது  இந்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை  உருவாக்கி  இருக்கிறது .மக்களின் தொடர் உண்ணாவிரதம் தமிழக அரசை திணறடித்து கொண்டிருக்கிறது .மக்களில் ஒருவராக , சமூக  அக்கறையின் வெளிப்பாடாக அணு உலை குறித்தும் ,அதன் அவசியம் ,அதனால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் குறித்து இக்கட்டுரையில் சற்று அலசுவோம் .

அணு என்பது மிக மிக நுண்ணிய துகள் என்பதை  நீங்கள் அறிவீர்கள்  .ப்ரோடான் , எலெக்ட்ரான் ,நியூட்றான் இவைகளின் சேர்கையால் அணு உருவாகிறது , அணுவின் சேர்க்கையால் பருப்பொருள் உருவாகிறது .








 அணுவிற்குள் இருக்கும் நியூட்றான்    1930  ம் வருடம் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இந்த அணுஆற்றலை பயன் படுத்த வேண்டும் என்கிற எண்ணம் கூடவே உதிக்க ஆரம்பித்து விட்டது. உரேனியம் ( uranium ),ப்ளுடோனியும்( plutonium ) அணுக்கள்  பிளக்கப்படும் போது  3500   - 4000  டிகிரி  செல்சிஸ் வெப்பம் உண்டாகிறது , இந்த வெப்பத்தை  பயன் படுத்தி நீர் சூடேற்றபட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது  .சரி எதற்காக இந்த அணு உலைகள் தேவை என பார்ப்போம் .


இந்தியாவில் 1947  ம் வருடம் 1 ,300  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது , இப்போழ்து 1  லட்சத்து 73  ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது , 2030  ம்   ஆண்டில் நான்கு லட்சம் மெகா வாட்டாக இருக்கும் .

வளர்ந்து வரும் தொழிற் தேவைகளை ஒன்றியும், பெருகிவரும் மக்கள் தொகையை ஒன்றியும் நாம் அதிபட்சமான மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் .சரி மின்சாரம் தயாரிக்க அணு மின்நிலையம் ஒன்றுதான் வழியா ?

இல்லை , பல முறைகளில் மின்சாரம் தயாரிக்கலாம் .

1 ) புனல் மின் நிலையம் ( ஹைட்ரோ பவர் பிளான்ட்ஸ் )
இவை நீரை நீர் தேக்கங்களில் தேக்கி வெகு வேகமாக வழியவைத்து அந்த உந்து சக்தியால் டுர்பைனை சுழல வைத்து ,பின் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்க ப்படுகிறது .இவை பெரும்பாலும் மழையை மற்றும் பருவகாலங்களை நம்பி இருக்கின்றன  .

2 ) அனல் மின் நிலையம் : ( தெர்மல் பவர் பிளான்ட்ஸ் )
நிலக்கரியை கொண்டு பாயலேரில் இருக்கும் நீரை சூடாக்கி , நீராவியை உண்டு பண்ணி அதை ஒரு கூம்பில் வேக மாக பீய்ச்சி அடித்து அதன் உந்ததால் டுர்பைனை சுற்றவைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது .

3 ) அலை மின் நிலையம் ( திடல் பவர் பிளான்ட்ஸ் )

இவை கடலோரங்களில் உருவாகும் அலையின் விசையால் டுர்பைனை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறை இதில் பலன் சற்று குறைவாகவே உள்ளது .



4  ) காற்றாலை ( வின்ட் மில் ) :

மலை அடிவாரங்களில் ,நல்ல காற்று வீசும் பகுதிகளில் இந்த காற்றாலைகள் நிறுவப்படுகின்றன , காற்று வேகமாக வீசும்போது ,விசிறி சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனெரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது .இது பெரும்பாலும் பருவ காலத்தை நம்பியே செயல் படுகிறது .
5 ) பரிதியாற்றல் மின்சாரம் ( சோலார் பவர் ) :

சிலிகான் சில்லுகள் பதித்த இந்த அட்டையை வெய்யலில் வைத்து அதன் மூலம் மின்சாரம் பெரும் இந்த முறை நவீன படுத்தபடாமல் பாழாய் கிடக்கிறது .


மின்சாரம் தயாரிக்க இத்தனை முறைகள் இருக்கும் போது அணுமின் உலையை தேர்ந்தேடுப்பதேன் ?

மேற் சொன்ன முறைகள் பெரும்பாலும் பருகாலங்களை சார்ந்தும் ,பெருமளவிலான எரிபொருளை செலவழித்தும் பெறப்படுகிறது உதாரணமாக இந்தியாவில் எரிபொருளின் இருப்பு மிக குறைவாகவே உள்ளது ,ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 43  லட்சத்து 80  ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20  லட்சம் டன் எண்ணை தேவைப்படுகிறது .எனவேதான் அணுமின் உலை நிறுவப்படுகிறது என மின் உலை அறிஞர்கள் சொன்னாலும் மின்சாரம் தேவை என்பதற்காக மிக அபாயகரமான ஒன்றை மடியில் கண்டிகொண்டு திரிவது நியாயமா ? என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது .

அணு உலை வரலாறு :  1942  இல் இரண்டாம் உலகப்போரின் போது சிகாகோ பல்கலை கழகத்தில்"சிகாகோ   பைல் 1  " என்கிற அணு உலையை என்ரிகோ பெர்மி ஆரம்பித்தார் .1954  இல் ரஷ்யாவில் ஆப்மிளிக் பவர் பிளான்ட் நிறுவப்பட்டது .இன்று உலகம் முழுக்க 400  க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன .அதில் அமெரிக்காவில் 108   ம்  , ஜெர்மன் , பிரான்ஸ் நாடுகளில் தலா 60  , 60  ம்  , உள்ளன . இந்தியாவில் மட்டும் 20  அணு உலைகள் உள்ளன .

கர்நாடக - கைக்காவில் - 4  ம் , குஜராத் - கக்ராபார் - 2  ம், தமிழ் நாடு - கல்பாக்கம் - 2  ம் , ராஜஸ்தான் -ரவாத்பாதாவில் - 6  அணு உலைகளும் உள்ளன .மேலும் ,ராஜஸ்தான் ,குஜராத் ஆகிய இடங்களில் தலா 2  கட்டுமான நிலையில் உள்ளன . கூடன் குளத்தில் 2  உலைகள் தயாராக உள்ளன , நான்கு அனுமதி பெறப்பட்டுள்ளது .மேலும் இந்தியாவிலேயே ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்கிற திறனுடன் கூடன் குளத்தில்தான்  அணு உலை அமைக்கப்பட்டுள்ளது .

என்ன ஆபத்து நேர்ந்து விடும் ?  அணுவின் கதிர் வீச்சை போன்ற ஆபத்தான ஒன்று பூமியில் இல்லை என்றே சொல்லலாம் .அதற்கு உதாரணமாக ஹிரோஷிமா , செர்நோபில் நிகழ்வை திரும்பி பார்க்கலாம் .ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதும் ,அமெரிக்கா அணு குண்டை சோதனை செய்து பார்பதற்கெனவே குண்டை போட்டது .விளைவை பாருங்கள் 





உரேனிய ,ப்ளுடோநியங்களை கொண்டு அணு உலை மட்டுமல்ல , அணுகுண்டும் செய்து வீசி மனித குலத்தை அழிக்க முற்படலாம் , நம்மிடம்தாம் அணு குண்டு இருக்கிறதே வீசி பார்க்கலாம் என்கிற மனநிலைக்கும் தள்ளப்படலாம் , தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இங்கு அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால் எஞ்சி இருப்பவரை எண்ணுதல் அரிது .செர்நோபில் அணு உலை வெடித்ததன் பயங்கரத்தைப்பாருங்கள்.
 


 பொதுவாக ஒரு அணு உலையின் ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள்தான் ,அதன்   பின் அதை பூமியில் வைத்து புதைத்து பல ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டும் ,சுனாமி , பூகம்பம் , தீவிரவாத தாக்குதலால் அணுஉலை வெடிக்க நேர்ந்தால் , விளைவு பல லட்சம் வருடம் கூட தாக்கும் .உரேனியம் அணுவின் அரை ஆயுட்க்காலமே 2  லட்சம் வருடம் , ஒரு வேலை இந்தியாவில் இருக்கும் ஏதேனும் ஒரு அணு உலையை மூடினால் கூட 2  க்க வேண்டும் , வெடித்தால் இரண்டு லட்சம் வருடம் வரை கதிர் வீச்சை கக்கி கொண்டே  இருக்கும் . அது சரி உரேனியும் இயற்க்கையாகத்தானே  கிடைக்கிறது அப்பொழுது இல்லாத கதிர் வீச்சா இப்பொழுது வந்து விடப்போகிறது என்றும் சிலர் கேட்பதுண்டு .உரேனியம் பல தாதுக்களுடன் கிடைக்கும் போது கதிர்வீச்சின் தன்மை மட்டுபட்டதாகவே இருக்கிறது .ஒரே இடத்தில் அவை குவியும் போது ஆற்றல் அதிகம் பெறுகின்றன .அணு கழிவை அகற்ற போதுமான தொழில் நுட்பம் இல்லை , மறு சூழ்ச்சி , கடலுக்கடியில் புதைப்பது இதுவே நடை முறையில் உள்ளது அணு உலையிலிருந்து வெளியேறும் காதற்று மற்றும் , நீரில் கதிர் வீச்சு தன்மை இருக்கும் .கடல் நீர்தான் அணுஉலையை குளிர்விக்க பயன்படுத்த படுகிறது .இது மீண்டும் கடலுக்கு செல்கிறது இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .கதிர்வீச்சால் பாதிக்க படுகிறவர்களுக்கு , புற்று நோய் , மனவளர்ச்சி இன்மை , குழந்தை இன்மை என பல பாதிப்புகள் ஏற்படலாம் .இத்தனை அபாயங்களை உள்ளடக்கிய மனித குலத்தையே பூண்டோடு அழித்து விடக்கூடிய இந்த ஆபத்தை இயற்கையே அணுவுக்குள் மறைத்து வைத்திருக்கும் போது நாம் ஏன் அதை தோண்டி ,சீண்டி வம்பை விலை கொடுத்து  வாங்க வேண்டும் . தற்போது இருக்கும் அனல் மின் நிலையங்களின் வழியாக கிடைக்கும் மின்சாரம் 30  சதவிகிதம் கடத்தி செல்லும் போதே வீணாகிறது அந்த வீணாதலை தடுக்க முயற்சித்தல் , சூரிய மின்சாரம் ,மற்றும் மாற்று சக்தி முறைகளில் மின்சாரம் தயாரித்தல் போன்ற       வழியை கண்டறிந்து நமது மின்தேவையை பூர்த்தி செய்ய அரசும் , அறிஞர்களும் முன்வரவேண்டும் .ஜப்பானின் புஹுஷிமா அணு உலைவெடித்ததை கேள்வி பட்டதும் ,ஜெர்மன் அரசு தானாக முன்வந்து அணுஉலைகளை தன்  நாட்டில் மூட உத்தரவிட்டது மக்கள் போராட்டம்  ஏதுமின்றி .அதை போல இந்திய அரசும் பின் நடக்கவிருப்பதை இப்பொழுதே கணித்து உண்ணாவிரதம், போராட்டம் நடத்தும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  அணு உலையை மூடி மக்கள் நல அரசு என நிருபிக்கும் என நம்புவோமாக !




வே  .தனசேகர்  



Sunday, September 4, 2011

லேப் டாப்பிற்க்கான ஐந்து அவசிய மென்பொருட்கள்

1. Prey - மடிக் கணினிகள்  திருடப்பட்டுவிட்டால் திருடியவர் இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது இந்த மென்பொருள்.

நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.

திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/



2 .Aerofoil

மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.

கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.

குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்

டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html

3 . AutoSensitivity

கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.

Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு
.NET Framework 3.5 or 4.0. தேவையாகும்

டவுண்லோட் இணைப்பு - http://autosensitivity.codeplex.com/

4 .TouchFreeze

மடிக்கணினிகளில் சில மென்பொருட்களை பயன்படுத்தும் போது தவறுதலாக Touchpad இல் விரல்கள் பட்டு கிளிக் செய்வதன் மூலம் அவை நிறுத்தப்பட்டுவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

இவற்றை தடுப்பதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.

இதை நிறுவியதும் கீபோட்டில் டைப் செய்துகொண்டிருக்கும் போது தற்காலிகமாக கிளிக்கை நிறுத்தி வைக்க முடிகிறது.

செட்டிங்குகள் எதுவும் இல்லாத இந்த மென்பொருளை இயங்கச் செய்ய நிறுத்திவிடுவதை மாத்திரம் டாஸ்க்பாரில் செய்துவிடலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே - http://code.google.com/p/touchfreeze/

5 . Core Temp

இதன் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது.

வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து பாவிக்கலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியின் வெப்பநிலையை Celsius  அல்லது Fahrenheit  அளவுகளில் காட்டுகின்றது.

டவுண்லோட் செய்வதற்கு - http://www.alcpu.com/CoreTemp/ 


ஒரு முறை சுற்றி வர 165 வருடங்களா ?

நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 165 வருடங்கள் ஆகின்றன. இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது, சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.

18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால், யுரேனஸின் சுற்றுப் பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதற்குக் காரணம், அருகில் உள்ள வேறு ஏதோ ஒரு கோள் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து யுரேனசுக்கு அப்பாலும் கிரகங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின.

இந் நிலையில் பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளரான வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு யுரேனஸ் என்ற கிரகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அதை அவர்கள் பார்க்கவில்லை.

நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச் சரியாக கணித்தவர்கள், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல்-வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியர் மற்றும் ஜான் கெளச் ஆடம்ஸ் ஆகியோர் தான். இவர்களும் யுரேனஸை பார்க்கவில்லை.

இந் நிலையில் லெ வெர்ரியர் தந்த தகவலின்பேரில் 1846ம் ஆண்டு ஜெர்மனியின் வானியல் ஆய்வாளரான ஜோஹன் கல்லே, இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் முதன் முதலாக அடையாளம் கண்டார்.

இவருக்கு முன்பே இத்தாலியின் பிரபலமான வானியல் ஆய்வாளரான கலிலியோ கலிலி, 1612ம் ஆண்டு டிசம்பரிலேயே இந்த கிரகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும், அதை நட்சத்திரம் என நினைத்துவிட்டுவிட்டார். ஆனால், அவரது நோட்ஸ்களில் உள்ள தகவல்களின்படி, அவர் பார்த்தது நட்சத்திரம் இல்லை, நெப்டியூன் தான் என பின்னாளில் தெரியவந்தது.

இதனால் இந்த கிரகம் அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு தான் என்றாகிவிட்டது.

சூரியனிலிருந்து 4.5 பில்லியன் மைல்கள் தொலைவி்ல் உள்ள இந்த கிரகத்தில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜனும், மீத்தேனும், ஹீலியமும் தான். இதனால் இதன் நிறம் நீல நிறமாக உள்ளது. இங்கு தரை என்று ஏதும் கிடையாது. இது ஒரு 'கேஸ் ஜயண்ட்'.

1846ம் ஆண்டு இந்த கிரகம் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பின் இன்று வந்து அடைந்துள்ளது நெப்டியூன். அதாவது, நெப்டியூன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது, 165 வருடங்கள்.

கண்ணால் பார்க்காமலேயே காதல் மாதிரி, தொலைநோக்கி மூலம் பார்க்கப்படாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் நெப்டியூன் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

எப்படி யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் 'டிஸ்டர்ப்' செய்கிறது என்ற ஆராய்ச்சியின் மூலம் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது தான் புளுட்டோவும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்டியூனின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தபோது தான் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது முழுமையான கிரகமே அல்ல.. ஒரு முழுமை பெறாத கோள் (dwarf planet) என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் இன்றைய தேதியில் நெப்டியூன் தான்.

நெப்டியூன் என்பது ரோமன் பெயராகும். இதற்கு அர்த்தம், 'கடல் சாமி' (

விண் சுற்றும் பெண்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை நாசா அனுப்பியுள்ளது.

இதன் மூலம் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்மணிகள் இருக்கப்போகிறார்கள்.

விண்வெளியிலும் தங்கள் உரிமையை நிலைநாட்டி விடுவார்கள் பெணகள் என நாசா விஞ்ஞானிகள் வேடிக்கையாக பேசி வருகிறார்கள்.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில்
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்காஃப் லிண்டென்பர்கெர் மற்றும் ஸ்டெஃபானி வில்சன், ஜப்பானைச் சேர்ந்த நவோக்கா யமாஸாகி ஆகியோர் விண்வெளிக்கு பயணமானார்கள்.

ஏற்கனவே இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க பெண்மணி டிரேசி கால்ட்வெல் டைசன் தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ளார்.

இவருடன் சேர்த்து நான்கு பெண்களும் மெஜாரிட்டி பலத்துடன் விண்வெளி நிலைய வேலைகளை கவனிக்கப் போகிறார்கள்.

முடிவு பெறும் நிலையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறுதிகட்டப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு சோதனைகள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரே நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பெண்கள் தங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
 

ட்ரெஸ் 2 பி புதிய இருள் கிரகம்

வாஷிங்டன்: விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயரும் சூட்டியுள்ளனர்.

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு 'ட்ரெஸ்-2 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இதுவரை கண்டுபிடித்துளள கிரகங்களிலேயே மிகவும கறுப்பான கிரகம் என்றால் அது இந்த ட்ரெஸ் 2 பி-தான். சூரிய ஒளியில் 1 சதவீதத்தை மட்டுமே இந்த கிரகம் பிரதிபலிக்கிறது. இதனால் நிலக்கரியை விட கறுப்பாக இந்தக் கிரகம் காட்சி தருகிறது.

இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த புதிய கிரகம் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது (ஒரு ஒளி ஆண்டு என்பது 6 ட்ரில்லியன் மைல் தூரம் கொண்டது!)

Saturday, September 3, 2011

தமிழர் கடவுளா விநாயகர் ?

"அய்ந்து கரத்தனை ஆனை முகத்தனை" ,என்று மிகத்தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு ,மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் ,இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா ? தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் !  ஆறுமுகம் பன்னிரு கரம் ,என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் ,பண்டிகையில் ,கலாசார ,பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது .பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மதசண்டைகளின் வரலாறு , முகலாயர் ,ஆங்கிலேயர் , பல்லவர்           களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு ,கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து .இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டுபிடித்து கடைபிடிக்கவேண்டாமா ? தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்  , விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம் ,அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும் .போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன .அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம்பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம்தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள் .எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ !, தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?!, முதுகுன்றம் ,விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிறபோது நமது பண்பாடும் ,கலாச்சாராமும் அழிந்து போகிறது .கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை .சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு )வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது .இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக ,எல்லோராலும்வணங்கப்படுகிற  கணபதியை போல ,தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ? அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ? சிவனுக்குபிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் ,ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ? தமிழனுக்கும் ,தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம் , விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடாவருடம் நினைவுபடுத்தி ,கொண்டாடவைத்து ,தன் பண்பாட்டு ,கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்துவருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில்தான் என்னோவோ ?

Friday, September 2, 2011

TEOTWAWKI

என்ன தலைப்பை பார்த்து குழம்பி விட்டீர்களா ? எல்லாம் சில குழப்ப வாதிகள் குழப்பி கொண்டிருக்கும் குழப்பலான குழப்பத்தின் சுருக்கம் தான் அது (  THE END OF THE WORLD AS WE KNOW IT ) .என்ன இன்னும் புரியவில்லையா ? உலகம் 2012  டிசம்பர் மாத இறுதியில் அழிந்து விடும் என்கிற ரீல்தான் அது .சூரியப்புயல் , புவி சுழற்சியில் ஏற்ப்பட போகும்  மாற்றம் , மயன் காலேண்டர்  கணக்கு , பிரமிட்  அமைப்பு., நாஸ்டர்டாமஸ்  கணிப்பு  இவைகளை ஒன்றி மதவாதிகளும் , மோடி முஸ்தான்களும் இந்த புனை கதையை பரப்பி மக்களை பீதிக்குலாக்கி வருகிறார்கள் .இதை கேள்விப்பட்ட சினிமா காரர்கள்  THE HAPPENING   என்று ஒரு படம் எடுத்து கல்லா கட்டி விட்டார்கள் .
அறிவியலார்கள் இதற்க்கு சப்பை கட்டுகட்டி கொண்டு வருகின்றனர் .எல்லா பருப்பொருளை சுற்றியும் காந்தபுலம் இருப்பதைப்போல , மிகப்பெரிய பாறை உருண்டையான பூமியை சுற்றியும் காந்த புலம் உள்ளது இது பரிதியில் ஏற்ப்படும் புயல் காரணமாக பூமியின் காந்த புலம் பாதிக்க பட்டு நவீன மின்னணு கருவிகள் , மனிதர்களின் மூளை மின்காந்தம் பாதிக்கப்பட்டு உலக அழிவு இந்த சூரிய சுனாமியால் ஏற்படும் என்று அறியல் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .இந்த மாதிரியான அழிவு புரளி காலம்காலமாய் வந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது . 





நவீன அகோரிகள்




செத்த பிணங்களை உண்ணும் அகோரிகளை போல , நிர்வாண உடலில் உணவை அடுக்கி கூடி நின்று கும்மாளமடிக்கும் , மிருகத்தனமான செயல் ஜப்பான் நாட்டில் ரசனையோடு கூடிய ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு கல்லா கட்டபடுகிறது. ச்சே! இவர்கள் என்ன மனிதர்கள் என்று நம்மை முகம் சுளிக்க வைக்கிறது , பாம்பு ,பூரான் ,பல்லி  திங்கிறவன்  புத்தி இப்படித்தான் இருக்கும் போல ,என்னதான் விலைக்காக விளக்கொளியில்  நிர்வாணமாக படுத்திருந்தாலும் அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நினைத்து பார்பார்களா இந்த கோட்டு சூட்டு போட்ட காட்டு  மிராண்டிகள் ? என்னதான் ஜப்பான் உலகின் மூன்றாவது வல்லரசென்றாலும் ,பெண்களையும் , வாழ்க்கையையும் வியாபாரமாக பார்க்கும் இவர்களை என்ன சொல்ல !!!!!!!!?




Thursday, September 1, 2011

அலைபேசிகளை ஆளும் ஆண்ட்ராயிட் (android)

உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட அலைபேசிகளை(cell phone) தயாரிக்கக பன்னாட்டு நிறுவனங்கள் போட்டபோட்டியில் இருக்கின்றன .இன்றளவும் கோலோச்சி கொண்டிருக்கிற  நோக்கியா நிறுவனத்தை ஓரங்கட்ட சாம்சுங் ,சோனி ,எல்ஜி, மோட்டோரோலா போன்ற நிறுவனகள் எத்தனையோ உத்தியை கையாண்டு வருகின்றன .இயங்குதள ( operating system ) புரட்சி ஏற்படுத்த கூகிள் "ஆண்ட்ராயிட்" இயங்குதளத்தை அறிமுகம் செய்து அலை பேசி சந்தையை தன்பக்கம் இழுத்து கொண்டிருக்கிறது .ஆண்ட்ராயிட் இயங்குதள அலைபேசிகள் ஒரு கணினியை போலவே செயல்படுகின்றன என்பதால் வெகு மக்களால் விரும்பப்படுகிறது ,மேலும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதளத்திற்கு பல ஆயிரம் மென்பொருள்களையும்( softwares ) அறிமுகம் செய்திருக்கிறது .உலக அளவில் மென் பொருள் துறையில் தலைமை பண்பேற்று சாதித்து வரும் நம் தமிழ் மென் பொருள் வல்லுனர்கள் முடிந்த அளவு ஆண்ட்ராயிட் இயங்குதளத்தில் தமிழ் மென் பொருளை இணைத்துள்ளனர் அவற்றில் சில இங்கு காண்போம் .

1.தமிழ்விசை  ( Thamizh type writting )
திரு.முகுந்த் அவர்கள் தலைமையிலான "தமிழா "மென்பொருட்கள் குழுவில் உள்ள குரு.ஜெகதீஷ் அவர்கள் உருவாக்கியுள்ள  மென்பொருள்  அலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லை என்ற தமிழ் ஆர்வலர்களின் குறையை நீக்கியுள்ளது.
      இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஆன்டிராய்டில் நேரடியாக தமிழ் மொழிக்கு சேவை வழங்கப்படவில்லை எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்தவற்றை டிஸ்கி(tscii) வழியாக காட்டச்செய்து, யுனிகோடில் பதிவு செய்கிறார்கள்.இது ஒரு மிக முக்கியமான அம்சம். ஒபேராவில் உலாவினால் தமிழ் தட்டச்சு செய்வதும், தமிழில் படிப்பதும் சாத்தியமே....கணினியே தேவையில்லாமல் நேரடியாக ஆன்டிராய்டு வழியாக மின்உலகில் வலம்வரலாம்....தமிழ் விசையின் உதவியுடன் . இலவசம். பொன்னியின் செல்வன் மின் நூலாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளனர் , இன்னும் பல தமிழ் நூல்கள் பதிவேற்ற தயாராக உள்ளன .
2  கூகிள் மேப்  ( Google Maps)
தொழில் நுட்ப்பத்தின் மகுடம் இந்த கூகிள் மேப் , உலகத்தில் எந்த மூலையில்  இருந்தாலும்  இப்ப்பொழுது  எங்கே இருக்கிறோம் , எந்த முகவரிக்கு போகவேண்டுமோ  அங்கே எப்படி போவது , நடந்து சென்றால் எத்தனை தூரம் , கார் , பஸ் ,ட்ரைன் இவைகளில்  சென்றால் எவளவு தூரம்  எந்த திசை என்றெல்லாம் நமக்கு மிகப்பெரும் வழிகாட்டியாக திகழ்கிறது ..

3.ஆன்டிராய்டு பூஸ்டர் 
உங்கள் ஆன்டிராய்டு அடிப்படையிலான மொபைலை மிகச்சிறப்பாக இயங்க வைக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். ஏனெனில் ஆன்டிராய்டு இயங்குவது இயங்குதளத்தின் அடிப்படையில் என்பதால் முதன்மை நினைவகத்தினை அவ்வப்போது தேவையில்லாத மென்பொருளை வெளியேற்றி நினைவகத்தினை சிறப்பாக மேலாண்மை செய்வதால் மென்பொருள்களும் சிறப்பாக இயங்குகின்றன.
4.நெட்குயின் பாதுகாப்பு மென்பொருள்
இம்மென்பொருள் மிகச்சிறப்பான பாதுகாப்பு மென்பொருள். இந்த மென்பொருளில் ஆன்டிவைரஸ், பயர்வால் மற்றும் ஆன்டிராய்டில் உள்ள நமது அலைபேசி எண்களை பேக் ப் எடுக்கவும் வசதிஉள்ளது. மேலும் நம் அலைபேசி எங்கேனும் தொலையும் பட்சத்தில் இதில் உள்ள mobile antilost வழியாக எளிதில் கண்டறியலாம். மேலும் மெமரியையும்(முதன்மை நினைவகம்-RAM ) அதிகமாக எடுத்துக்கொள்ளாது.
5. பரிமாற்றங்கள்
இரு நண்பர்களுக்குள் தாங்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் பைல்கள் ஆகியவற்றை ஆகியவற்றை வெகு எளிதாக பரிமாற்ற இரு மொபைல்களையும் கிட்டே வைத்தாலே அவற்றை பரிமாற்றிட உதவும் மென்பொருள்.

உலகின்  கலை களஞ்சியம் ,எல்லாம் தெரிந்தவர் ,கூகிள் ஆண்டவர் என்றெல்லாம் இனைய பயன்பாட்டாலர்களால் போற்றப்படும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதள மென்பொருட்களை இலவசமாகவே அறிமுகப்படுத்தி உலகத்தை தன் வசபடுத்தி ஆட்சி செய்கிறதென்றால் அது மிகையில்லை .

 

Monday, July 18, 2011

பறக்கும் கார்

காமிக்ஸ் புத்தகங்களிலும் , ஜேம்ஸ் பான்ட் கதைகளிலும் கற்பனையாக சொல்லப்பட்ட பறக்கும் கார் , இப்பொழுது Terrafugia  என்கிற பெயரில் நிஜத்திலேயே வந்துவிட்டது .ஜூலை 18 ம் தேதி லண்டன் நகரில் பரிசோதித்து வெற்றிகண்ட இந்த காரில் இரண்டு பேர் பயணிக்கலாமாம் . , இன்னும் அய்ந்தாண்டுகளில் வழகத்திற்கு , சாதாரண பயன்பாடிற்கு வந்துவிடுமாம் . இதன் விலை $250,௦௦௦    என
                                                                  தற்பொழது நிர்ணயம் செய்ய பட்டுள்ளதாம் .

Friday, July 15, 2011

சீனாவில் தோன்றிய கடல் கன்னி

    
சீனாவில் உள்ள கடல் கரை ஒன்றில் கடல் கன்னி ஒருவர் சில வாரங்களுக்கு முன் தோன்றி இருந்தார் என்று இணையங்களில் படங்களுடன் பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.


ஆயினும் இது உண்மையிலேயே கடல் கன்னியின் உருவம்தானா? அல்லது பம்மாத்து வேலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.


படங்களை பார்த்து நீங்களே முடிவு எடுங்கள்.















Monday, July 4, 2011

முக நூலுக்கு போட்டியாக கூகுள் பிளஸ்

உலகம் உள்ளங்கையில் என்பதும் மாறி விரல் நுனியில் வந்துவிட்டது , இன்றைக்கு வெளிவருகிற எல்லா செல் போன்களிலும் சமூக வலைதலங்கலான FACE BOOK , MY SPACE ,TWITTER ஆகியவற்றிற்கு நேரடியாக பதிவேற்றம் செய்கிற அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன .இன்றைக்கு பெரும்பாலானோர் முக நூலை தனது நேரடி நிமிடாந்திர தொடர்புக்கான கருவியாய் பயன்படுத்துகின்றனர் .இத்தனை முக்கியத்துவம் பெற்ற FACE புக் ற்கு போட்டியாய் கூகுள் ஆண்டவர் எனப்ப்படும் நிறுவனம் முக நூலை போன்ற சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது " கூகுள் பிளஸ் " என்கிற பெயரில் .மிக விரைவில் வெளி வர இருக்கிற கூகுள் பிளஸ் இனைய உலகில் குறிப்பாக சமூக வலைதள உறவில் பெரிய மாற்றத்தை கொணரும் என்பதில் சந்தேகமே இல்லை


.https://plus.google.com/102444197181454403304/posts/Br6RAGPbA1M#102444197181454403304/posts/Br6RAGPbA1M

Monday, June 27, 2011

தட்டுபட்ட பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு பற்றி அவ்வப்பொழுது ஆச்சர்யங்களும் சர்ச்சைகளும் எழுந்த வண்ணமே உள்ளன . அமெரிக்காவில் தோன்றி மறைவதாகவும் , ராணுவம் அதை கண்டு பிடித்து பாது காத்து வைத்திருப்பதாகவும் செய்தி வந்து மறையும் . எல்லாம் மர்மம் .ஆனால் ஜூன் 24  ம் தேதி மேற்கு லண்டனில் பி.பி .சி யின் தலை அலுவலகத்துக்கு மேலாக வெள்ளை நிற திட்டு ஒன்று இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்ததை பலரும் கண்டு அதை பதிவும் செய்திருக்கின்றனர் .அது ஒரு வேலை பறக்கும் தட்டாக இருக்குமோ என அறிவியலார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .எதற்கும் நீங்களும் அந்த காணொளியை கண்டு களியுங்கள் .

Tuesday, February 8, 2011

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமை - க.முகிலன்

“அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமேயானால் அப்பிறவியில் நான் தோட்டியாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று காந்தி சொன்னார். கையால் மலம் அள்ளுதல் உள்ளிட்ட துப்புரவு வேலைகளை சமூகத்தின் உயர்ந்த பணி என்று காந்தி கூறினார். ‘மனிதக் கழிவை அகற்றுவதை மாண்புமிக்க பணி’ என்று காந்தி கருதியதாலேயே சமூகத்தில் எல்லோரும் அப்படி நினைப்பார்கள் என்று கற்பனை செய்தார். அவருடைய ஆசிரமத்தில் ஒரு பார்ப்பனப் பையன் கழிப்பறையைத் தூய்மை செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்வதாகக் கூறி வருணாசிரமத்திற்குப் புது விளக்கமளித்து ஏமாற்ற முயன்றார், காந்தியார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரே, தோட்டிகள் என்கிற மனிதக் கழிவை அகற்றும் பணி செய்யும் பிரிவினரை இழிந்தவராகக் கருதுகின்றனர். தீண்டாமையின் உச்சக் கட்டக் கொடிய வடிவமான மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிநிலை இந்தியா சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிப்பது வெட்கக்கேடாகும்.

1993ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றுமாறு செய்வது, உலர் கழிப்பறைகள் கட்டுவது - தடுப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் பணத்தைக் கொண்டு, ‘மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிப்போம்’ என்று ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. சில சிற்றூர்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ ஏற்பாடு செய்யாமல் கழிப்பிடக் கட்டடங்கள் கட்டப்பட்டுப் பணம் பாழடிக்கப்பட்டது. சிற்றூர்களில் 90 விழுக்காட்டினர் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் நிலை இருக்கும்போது, இத்தகைய கழிப்பிடங்கள் கட்டப்படுவதைக் கண்டு மக்கள் மனம் குமுறினர்.

மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதற்கான தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னும், இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தன. எனவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இதில் முதல் குற்றவாளி இந்திய இரயில்வே துறையாகும். பெரு நகரங்களில் தொடர்வண்டி நிலையங்களில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் அவல நிலை இன்றும் இருக்கிறது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குடலை முறுக்கும்படியான கொடிய நாற்றமடிக்கிறது. தொடர்வண்டிகளில் கழிப்பறைக் கழிவுகள், நிலையங்களில் கீழே விழாதவாறு நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான வசதிகள் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தம் மாநிலத்தில் இந்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மனிதக் கழிவைத் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் அகற்றுவதை ‘தலித் முரசு’ போன்ற இதழ்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
உ.பி, பீகார், உத்தர்கண்ட் உள்ளிட்ட வட இந்தியாவில் ஆறு மாநிலங்களில் 2004 ஆம் ஆண்டு 6 இலட்சம் உலர் கழிப்பறைகள் இருந்தன. இவை இப்போது 2.4 இலட்சமாகக் குறைந்துள்ளன என்று நடுவண் அரசின், வீட்டுவசதி மற்றும் நகர வறுமை ஒழிப்புத் துறைக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது. மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதை ஒழிப்பதற் கான தலித் அமைப்பு (Safai Karmacharis Amdolan - SKA) பத்து ஆண்டுகளுக்கு முன்பு 13 இலட்சமாக இருந்த மனிதக்கழிவை அகற்றும் தலித்துகளின் எண்ணிக்கை இப்போது 3 இலட்சமாகக் குறைந்துள்ளது எனக்கூறி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் இந்த இழிதொழிலிலிருந்து விடுபட்ட தலித்துகளைத் திரட்டி 1.11.2010 அன்று தில்லியில் பேரணி நடத்தியது.

அரியானா மாநிலத்தில் 2010 மே மாதத்தில் அம்பாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், வாழ்நாள் முழுவதும் மனிதக் கழிவை அகற்றும் தொழில் செய்து வந்த தலித்துகள் 60 பேர் தாம் பயன்படுத்திய மலம் தூக்கிச் செல்லும் கூடைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். இவர்களுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்கும் திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களாக இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

ஆனால் அய்ந்து மாதங்கள் கழித்து துப்புரவுப் பணியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.ஸ்ரோ, “மனிதக் கழிவை அகற்றி வந்த 200 பேருக்கு மாதம் ரூ.4,400 சம்பளத்தில் உள்ளாட்சியில் துப்புரவுப் பணியாளர் வேலை கொடுத்தோம். மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த வேலை தரப்பட்டது. ஆனால் அவர்கள் துப்புரவுப் பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. எனவே அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார். (தி இந்து 26.10.10). மனிதக் கழிவை அகற்றுவோருக்கான மறுவாழ்வுத் திட்டம் வேண்டா வெறுப்பாக மேல்சாதி அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நகரங்களில் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நகரங்களில் பல வீடுகளில் கழிவுத் தொட்டி அமைக்காமல், கழிவறையிலிருந்து மலம் தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்க்குச் செல்லுமாறு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி நிருவாகம் இவற்றைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். நடுவண் அரசின் மனிதக் கழிவை அகற்றும் குடும்பங்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை மாநிலங்கள் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை 2007 திசம்பர் மாதத்திற்குள் ஒழிப்பதென ஒரு கால எல்லை அரசால் அறிவிக்கப்பட்டது. பிறகு இது மார்ச்சு 2009, மார்ச்சு 2010 என நீட்டிக்கப்பட்டது. 25.10.10 அன்று சோனியா காந்தி தலைமையில் கூடிய தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 2012ஆம் ஆண்டிற்குள் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலையை அரசு ஒழித்திட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மாநகரங்களில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணிக்காகப் பாதாளச் சாக்கடையில் இறங்கும் போது விஷவாயு தாக்கிப் பலர் இறக்கின்றனர். இது குறித்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப் பணியில் இனி மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்; எந்திரங்கள் மூலமாக இப்பணி செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறப்பட்டது. ஆயினும் அதன்பிறகும் பாதாளச் சாக்கடையில் கழிவை அகற்றும்போது சிலர் இறந்தனர். எனவே நாராயணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு மீது தொடர்ந்தார். 7.12.10 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நின்று அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் விளக்கமளித்துள்ளனர். சாக்கடைப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக இன்னும் 4 வாரத்துக்குள் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.   (தினத்தந்தி 7.12.10)

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிநிலை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகள் எந்திரங்கள் மூலம் மட்டுமே அகற்றப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் துப்புரவுப் பணியாளர்களாகத் தாழ்த்தப்பட்ட மக்களே இருக்கின்றனர். சாதி அமைப்பும் அதன் ஒடுக்கு முறையும் அப்படியே நீடிக்கின்றன என்பதற்கு இது தக்க சான்றாகும். துப்புரவுப் பணியை உடல் நலத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் நவீனப்படுத்த வேண்டும்.

நன்றி : கீற்று இணையதளம்

Friday, January 28, 2011

தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்


தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்

கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்

செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்

ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்

கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்

எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்

மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்

துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்

நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்

தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்

மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்

சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கவிஞர் தாமரை //// கன்னடர்

கவிஞர் அறிவுமதி //// தெலுங்கர்

பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

திருச்சி வேலுச்சாமி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்

கிருஷ்ணசாமி புதிய தமிழகம் தெலுங்கர்

வெங்கட்ராமன் தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சி தெலுங்கர்

அதியமான் ஆதித் தமிழர் பேரவை கன்னடர்

கார்முகில் மா.லெ. கட்சி தெலுங்கர்

ஞானதேசிகன் காங்கிரசுக் கட்சி தெலுங்கர்
நடுவணரசை ஆட்டிப் படைக்கும் மலையாளிகள்!


என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,

என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,

ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,

சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,

கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,

சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,

கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,

வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,

சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி

கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்
சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர்

நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்
பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்
செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ரகு மேனன்,

நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்,
ஜவுளிச் துறை செயலாளர் ரீட்டா மேனன்,
கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் கங்காதரன்,

குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர்,
சட்டத்துறை செயலாளர் விசுவநாதன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர்

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர். அவர்கள்:

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது

வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!


சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது