Monday, September 26, 2011

பசுமைதாய்க்கு அஞ்சலி

40  மில்லியன் மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , சுற்று சூழல் சீர்கேடு குறித்து அதீத அக்கறை கொண்டவர் .கென்யா நாட்டை சேர்ந்தவரான மாத்தாய் , ஒரு பேராசிரியராக ,அரசியல் வாதியாக ,பசுமைதாயாக   பன்முகத்தன்மையோடு , பசுமைக்கும் ,மானுட வர்கத்தின் மேன்மைக்கு பாடாற்றினார் .


அவரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாக : 

  • 1940: கென்யாவில் உள்ளா கேரி என்கிற கிராமத்தில் பிறந்தார் 
  • 1964: அமெரிக்க பல்கலை கழகத்தில் இளங்கலை உயிரியல் பயின்றார்
  • 1966: முதுகலை அறிவியலை , பிட்ஸ் பெர்க் பலகலைகழகத்தில் பயின்றார்
  • 1971: நைரோபி பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்  ,கிழக்கு  ஆசியாவிலேயே  முனைவர் பட்டம் பெற்ற  முதல் பெண்மணி இவரே  
  • 1997: தனது "பசுமை வளைய இயக்கம்  (Green Belt Movement  ) நிறுவினார்
  • 2002: கென்யா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  • 2004: சமாதானத்திற்கான நோபெல் பரிசு வென்றார் .
  • 2011: செப்டம்பர் 25  அதிகாலை தனது 71  வது வயதில் இயற்கையோடு கலந்து போனார் .


மரம் ,மனிதம் ,இரண்டிற்காகவும்
தன்னை அர்பணித்த அந்த பசுமைதாய் இன்று 25 / 09 / 2011  அன்று  புற்று நோயினால் இறந்து போனார் .இல்லை இயற்கையோடு இரண்டற கலந்து  போனார் .

Monday, September 19, 2011

அணு மின் நிலையம் அவசியம்தானா ?

ஹீரா ஷிமா , நாகசாகி , செர்நோபில் ,அமெரிக்காவின் மூன்று மைல் தீவு ,இந்தியாவில் நரோரா ஆகிய நகரங்களில் நடந்த அணு உலை விபத்து மற்றும் வெடிப்பை  தொடர்ந்து , உலகமே இன்று அணுகுண்டு , அணு பயன்பாட்டில் விளையும் ஆற்றல் குறித்து எதிர்ப்பும் ,மறுப்பும் தெரிவித்து வருகிற நிலையில் தமிழகத்தில், நெல்லை மாவட்டம் ,கூடங்குளத்தில் ,13 ,171  கோடி மதிப்பில் செயல் பட இருக்கிற அணு உலைக்கு அரசியல் தலைவர்கள் ,மற்றும் ,சமூக ஆர்வலர்கள் ,பொது மக்களிடயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது .இது  இந்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை  உருவாக்கி  இருக்கிறது .மக்களின் தொடர் உண்ணாவிரதம் தமிழக அரசை திணறடித்து கொண்டிருக்கிறது .மக்களில் ஒருவராக , சமூக  அக்கறையின் வெளிப்பாடாக அணு உலை குறித்தும் ,அதன் அவசியம் ,அதனால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் குறித்து இக்கட்டுரையில் சற்று அலசுவோம் .

அணு என்பது மிக மிக நுண்ணிய துகள் என்பதை  நீங்கள் அறிவீர்கள்  .ப்ரோடான் , எலெக்ட்ரான் ,நியூட்றான் இவைகளின் சேர்கையால் அணு உருவாகிறது , அணுவின் சேர்க்கையால் பருப்பொருள் உருவாகிறது .








 அணுவிற்குள் இருக்கும் நியூட்றான்    1930  ம் வருடம் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இந்த அணுஆற்றலை பயன் படுத்த வேண்டும் என்கிற எண்ணம் கூடவே உதிக்க ஆரம்பித்து விட்டது. உரேனியம் ( uranium ),ப்ளுடோனியும்( plutonium ) அணுக்கள்  பிளக்கப்படும் போது  3500   - 4000  டிகிரி  செல்சிஸ் வெப்பம் உண்டாகிறது , இந்த வெப்பத்தை  பயன் படுத்தி நீர் சூடேற்றபட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது  .சரி எதற்காக இந்த அணு உலைகள் தேவை என பார்ப்போம் .


இந்தியாவில் 1947  ம் வருடம் 1 ,300  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது , இப்போழ்து 1  லட்சத்து 73  ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது , 2030  ம்   ஆண்டில் நான்கு லட்சம் மெகா வாட்டாக இருக்கும் .

வளர்ந்து வரும் தொழிற் தேவைகளை ஒன்றியும், பெருகிவரும் மக்கள் தொகையை ஒன்றியும் நாம் அதிபட்சமான மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம் .சரி மின்சாரம் தயாரிக்க அணு மின்நிலையம் ஒன்றுதான் வழியா ?

இல்லை , பல முறைகளில் மின்சாரம் தயாரிக்கலாம் .

1 ) புனல் மின் நிலையம் ( ஹைட்ரோ பவர் பிளான்ட்ஸ் )
இவை நீரை நீர் தேக்கங்களில் தேக்கி வெகு வேகமாக வழியவைத்து அந்த உந்து சக்தியால் டுர்பைனை சுழல வைத்து ,பின் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்க ப்படுகிறது .இவை பெரும்பாலும் மழையை மற்றும் பருவகாலங்களை நம்பி இருக்கின்றன  .

2 ) அனல் மின் நிலையம் : ( தெர்மல் பவர் பிளான்ட்ஸ் )
நிலக்கரியை கொண்டு பாயலேரில் இருக்கும் நீரை சூடாக்கி , நீராவியை உண்டு பண்ணி அதை ஒரு கூம்பில் வேக மாக பீய்ச்சி அடித்து அதன் உந்ததால் டுர்பைனை சுற்றவைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது .

3 ) அலை மின் நிலையம் ( திடல் பவர் பிளான்ட்ஸ் )

இவை கடலோரங்களில் உருவாகும் அலையின் விசையால் டுர்பைனை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறை இதில் பலன் சற்று குறைவாகவே உள்ளது .



4  ) காற்றாலை ( வின்ட் மில் ) :

மலை அடிவாரங்களில் ,நல்ல காற்று வீசும் பகுதிகளில் இந்த காற்றாலைகள் நிறுவப்படுகின்றன , காற்று வேகமாக வீசும்போது ,விசிறி சுழன்று அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனெரேட்டரை சுழல வைத்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது .இது பெரும்பாலும் பருவ காலத்தை நம்பியே செயல் படுகிறது .
5 ) பரிதியாற்றல் மின்சாரம் ( சோலார் பவர் ) :

சிலிகான் சில்லுகள் பதித்த இந்த அட்டையை வெய்யலில் வைத்து அதன் மூலம் மின்சாரம் பெரும் இந்த முறை நவீன படுத்தபடாமல் பாழாய் கிடக்கிறது .


மின்சாரம் தயாரிக்க இத்தனை முறைகள் இருக்கும் போது அணுமின் உலையை தேர்ந்தேடுப்பதேன் ?

மேற் சொன்ன முறைகள் பெரும்பாலும் பருகாலங்களை சார்ந்தும் ,பெருமளவிலான எரிபொருளை செலவழித்தும் பெறப்படுகிறது உதாரணமாக இந்தியாவில் எரிபொருளின் இருப்பு மிக குறைவாகவே உள்ளது ,ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 43  லட்சத்து 80  ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20  லட்சம் டன் எண்ணை தேவைப்படுகிறது .எனவேதான் அணுமின் உலை நிறுவப்படுகிறது என மின் உலை அறிஞர்கள் சொன்னாலும் மின்சாரம் தேவை என்பதற்காக மிக அபாயகரமான ஒன்றை மடியில் கண்டிகொண்டு திரிவது நியாயமா ? என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது .

அணு உலை வரலாறு :  1942  இல் இரண்டாம் உலகப்போரின் போது சிகாகோ பல்கலை கழகத்தில்"சிகாகோ   பைல் 1  " என்கிற அணு உலையை என்ரிகோ பெர்மி ஆரம்பித்தார் .1954  இல் ரஷ்யாவில் ஆப்மிளிக் பவர் பிளான்ட் நிறுவப்பட்டது .இன்று உலகம் முழுக்க 400  க்கும் மேற்பட்ட அணு உலைகள் உள்ளன .அதில் அமெரிக்காவில் 108   ம்  , ஜெர்மன் , பிரான்ஸ் நாடுகளில் தலா 60  , 60  ம்  , உள்ளன . இந்தியாவில் மட்டும் 20  அணு உலைகள் உள்ளன .

கர்நாடக - கைக்காவில் - 4  ம் , குஜராத் - கக்ராபார் - 2  ம், தமிழ் நாடு - கல்பாக்கம் - 2  ம் , ராஜஸ்தான் -ரவாத்பாதாவில் - 6  அணு உலைகளும் உள்ளன .மேலும் ,ராஜஸ்தான் ,குஜராத் ஆகிய இடங்களில் தலா 2  கட்டுமான நிலையில் உள்ளன . கூடன் குளத்தில் 2  உலைகள் தயாராக உள்ளன , நான்கு அனுமதி பெறப்பட்டுள்ளது .மேலும் இந்தியாவிலேயே ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்கிற திறனுடன் கூடன் குளத்தில்தான்  அணு உலை அமைக்கப்பட்டுள்ளது .

என்ன ஆபத்து நேர்ந்து விடும் ?  அணுவின் கதிர் வீச்சை போன்ற ஆபத்தான ஒன்று பூமியில் இல்லை என்றே சொல்லலாம் .அதற்கு உதாரணமாக ஹிரோஷிமா , செர்நோபில் நிகழ்வை திரும்பி பார்க்கலாம் .ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதும் ,அமெரிக்கா அணு குண்டை சோதனை செய்து பார்பதற்கெனவே குண்டை போட்டது .விளைவை பாருங்கள் 





உரேனிய ,ப்ளுடோநியங்களை கொண்டு அணு உலை மட்டுமல்ல , அணுகுண்டும் செய்து வீசி மனித குலத்தை அழிக்க முற்படலாம் , நம்மிடம்தாம் அணு குண்டு இருக்கிறதே வீசி பார்க்கலாம் என்கிற மனநிலைக்கும் தள்ளப்படலாம் , தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இங்கு அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டால் எஞ்சி இருப்பவரை எண்ணுதல் அரிது .செர்நோபில் அணு உலை வெடித்ததன் பயங்கரத்தைப்பாருங்கள்.
 


 பொதுவாக ஒரு அணு உலையின் ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள்தான் ,அதன்   பின் அதை பூமியில் வைத்து புதைத்து பல ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டும் ,சுனாமி , பூகம்பம் , தீவிரவாத தாக்குதலால் அணுஉலை வெடிக்க நேர்ந்தால் , விளைவு பல லட்சம் வருடம் கூட தாக்கும் .உரேனியம் அணுவின் அரை ஆயுட்க்காலமே 2  லட்சம் வருடம் , ஒரு வேலை இந்தியாவில் இருக்கும் ஏதேனும் ஒரு அணு உலையை மூடினால் கூட 2  க்க வேண்டும் , வெடித்தால் இரண்டு லட்சம் வருடம் வரை கதிர் வீச்சை கக்கி கொண்டே  இருக்கும் . அது சரி உரேனியும் இயற்க்கையாகத்தானே  கிடைக்கிறது அப்பொழுது இல்லாத கதிர் வீச்சா இப்பொழுது வந்து விடப்போகிறது என்றும் சிலர் கேட்பதுண்டு .உரேனியம் பல தாதுக்களுடன் கிடைக்கும் போது கதிர்வீச்சின் தன்மை மட்டுபட்டதாகவே இருக்கிறது .ஒரே இடத்தில் அவை குவியும் போது ஆற்றல் அதிகம் பெறுகின்றன .அணு கழிவை அகற்ற போதுமான தொழில் நுட்பம் இல்லை , மறு சூழ்ச்சி , கடலுக்கடியில் புதைப்பது இதுவே நடை முறையில் உள்ளது அணு உலையிலிருந்து வெளியேறும் காதற்று மற்றும் , நீரில் கதிர் வீச்சு தன்மை இருக்கும் .கடல் நீர்தான் அணுஉலையை குளிர்விக்க பயன்படுத்த படுகிறது .இது மீண்டும் கடலுக்கு செல்கிறது இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது .கதிர்வீச்சால் பாதிக்க படுகிறவர்களுக்கு , புற்று நோய் , மனவளர்ச்சி இன்மை , குழந்தை இன்மை என பல பாதிப்புகள் ஏற்படலாம் .இத்தனை அபாயங்களை உள்ளடக்கிய மனித குலத்தையே பூண்டோடு அழித்து விடக்கூடிய இந்த ஆபத்தை இயற்கையே அணுவுக்குள் மறைத்து வைத்திருக்கும் போது நாம் ஏன் அதை தோண்டி ,சீண்டி வம்பை விலை கொடுத்து  வாங்க வேண்டும் . தற்போது இருக்கும் அனல் மின் நிலையங்களின் வழியாக கிடைக்கும் மின்சாரம் 30  சதவிகிதம் கடத்தி செல்லும் போதே வீணாகிறது அந்த வீணாதலை தடுக்க முயற்சித்தல் , சூரிய மின்சாரம் ,மற்றும் மாற்று சக்தி முறைகளில் மின்சாரம் தயாரித்தல் போன்ற       வழியை கண்டறிந்து நமது மின்தேவையை பூர்த்தி செய்ய அரசும் , அறிஞர்களும் முன்வரவேண்டும் .ஜப்பானின் புஹுஷிமா அணு உலைவெடித்ததை கேள்வி பட்டதும் ,ஜெர்மன் அரசு தானாக முன்வந்து அணுஉலைகளை தன்  நாட்டில் மூட உத்தரவிட்டது மக்கள் போராட்டம்  ஏதுமின்றி .அதை போல இந்திய அரசும் பின் நடக்கவிருப்பதை இப்பொழுதே கணித்து உண்ணாவிரதம், போராட்டம் நடத்தும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  அணு உலையை மூடி மக்கள் நல அரசு என நிருபிக்கும் என நம்புவோமாக !




வே  .தனசேகர்  



Sunday, September 4, 2011

லேப் டாப்பிற்க்கான ஐந்து அவசிய மென்பொருட்கள்

1. Prey - மடிக் கணினிகள்  திருடப்பட்டுவிட்டால் திருடியவர் இணையத்தை பயன்படுத்தும் போது அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது இந்த மென்பொருள்.

நிறுவியதும் கணினியில் மறைந்துகொள்ளும் இந்த மென்பொருளை உங்களுக்கு தேவையான நேரத்தில் இணையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும்.

திருடியவர் குறிப்பிட்ட மடிக்கணினியில் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் உடனே அக்கணினி எங்கிருக்கிறது என்பதையும் மற்றும் ஏனைய தகவல்களையும் தந்து விடும்.டவுண்லோட் செய்வதற்கு - http://preyproject.com/



2 .Aerofoil

மடிக்கணினியின் பேட்டரி வேலை செய்யும் நேரத்தை 10% வீதத்திலிருந்து 25 % வீதம் வரை அதிகரிக்கின்றது இந்த மென்பொருள்.

கணினியின் சக்தியை விரயமாக்கும் தேவையில்லாத சிலவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் இதை செய்கிறதாம். உதாரணமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் Aero glass interface, the Windows sidebar, muting the sound போன்றவையாகும்.

குறிப்பு - இந்த மென்பொருளை நிறுவ முன்னர் இதே போன்று செயற்படும் வேறு மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அவற்றை நீக்கிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்

டவுண்லோட் - http://silentdevelopment.blogspot.com/2010/05/aerofoil-151-released.html

3 . AutoSensitivity

கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.

Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு
.NET Framework 3.5 or 4.0. தேவையாகும்

டவுண்லோட் இணைப்பு - http://autosensitivity.codeplex.com/

4 .TouchFreeze

மடிக்கணினிகளில் சில மென்பொருட்களை பயன்படுத்தும் போது தவறுதலாக Touchpad இல் விரல்கள் பட்டு கிளிக் செய்வதன் மூலம் அவை நிறுத்தப்பட்டுவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

இவற்றை தடுப்பதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.

இதை நிறுவியதும் கீபோட்டில் டைப் செய்துகொண்டிருக்கும் போது தற்காலிகமாக கிளிக்கை நிறுத்தி வைக்க முடிகிறது.

செட்டிங்குகள் எதுவும் இல்லாத இந்த மென்பொருளை இயங்கச் செய்ய நிறுத்திவிடுவதை மாத்திரம் டாஸ்க்பாரில் செய்துவிடலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே - http://code.google.com/p/touchfreeze/

5 . Core Temp

இதன் மூலம் கணினியின் வெப்பநிலை போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. லேப்டாப்களின் தரம் மற்றும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அது வேகமாகவே சூடாகவும் செய்கிறது.

வெப்பமே கணினியின் ஹாட்வேர்களுக்கு முதல் எதிரி, ஆகவே தான் மடிக்கணினியை தொடர்ச்சியாக பாவிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்ததும் சிறிது நேரம் அணைத்து விட்டு சூடு தணிந்ததும் பின்னர் ஆன் செய்து பாவிக்கலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியின் வெப்பநிலையை Celsius  அல்லது Fahrenheit  அளவுகளில் காட்டுகின்றது.

டவுண்லோட் செய்வதற்கு - http://www.alcpu.com/CoreTemp/ 


ஒரு முறை சுற்றி வர 165 வருடங்களா ?

நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 165 வருடங்கள் ஆகின்றன. இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது, சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.

18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால், யுரேனஸின் சுற்றுப் பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதற்குக் காரணம், அருகில் உள்ள வேறு ஏதோ ஒரு கோள் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து யுரேனசுக்கு அப்பாலும் கிரகங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின.

இந் நிலையில் பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளரான வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு யுரேனஸ் என்ற கிரகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அதை அவர்கள் பார்க்கவில்லை.

நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச் சரியாக கணித்தவர்கள், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல்-வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியர் மற்றும் ஜான் கெளச் ஆடம்ஸ் ஆகியோர் தான். இவர்களும் யுரேனஸை பார்க்கவில்லை.

இந் நிலையில் லெ வெர்ரியர் தந்த தகவலின்பேரில் 1846ம் ஆண்டு ஜெர்மனியின் வானியல் ஆய்வாளரான ஜோஹன் கல்லே, இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் முதன் முதலாக அடையாளம் கண்டார்.

இவருக்கு முன்பே இத்தாலியின் பிரபலமான வானியல் ஆய்வாளரான கலிலியோ கலிலி, 1612ம் ஆண்டு டிசம்பரிலேயே இந்த கிரகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும், அதை நட்சத்திரம் என நினைத்துவிட்டுவிட்டார். ஆனால், அவரது நோட்ஸ்களில் உள்ள தகவல்களின்படி, அவர் பார்த்தது நட்சத்திரம் இல்லை, நெப்டியூன் தான் என பின்னாளில் தெரியவந்தது.

இதனால் இந்த கிரகம் அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு தான் என்றாகிவிட்டது.

சூரியனிலிருந்து 4.5 பில்லியன் மைல்கள் தொலைவி்ல் உள்ள இந்த கிரகத்தில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜனும், மீத்தேனும், ஹீலியமும் தான். இதனால் இதன் நிறம் நீல நிறமாக உள்ளது. இங்கு தரை என்று ஏதும் கிடையாது. இது ஒரு 'கேஸ் ஜயண்ட்'.

1846ம் ஆண்டு இந்த கிரகம் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பின் இன்று வந்து அடைந்துள்ளது நெப்டியூன். அதாவது, நெப்டியூன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது, 165 வருடங்கள்.

கண்ணால் பார்க்காமலேயே காதல் மாதிரி, தொலைநோக்கி மூலம் பார்க்கப்படாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் நெப்டியூன் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

எப்படி யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் 'டிஸ்டர்ப்' செய்கிறது என்ற ஆராய்ச்சியின் மூலம் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது தான் புளுட்டோவும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்டியூனின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தபோது தான் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது முழுமையான கிரகமே அல்ல.. ஒரு முழுமை பெறாத கோள் (dwarf planet) என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் இன்றைய தேதியில் நெப்டியூன் தான்.

நெப்டியூன் என்பது ரோமன் பெயராகும். இதற்கு அர்த்தம், 'கடல் சாமி' (

விண் சுற்றும் பெண்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை நாசா அனுப்பியுள்ளது.

இதன் மூலம் விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பெண்மணிகள் இருக்கப்போகிறார்கள்.

விண்வெளியிலும் தங்கள் உரிமையை நிலைநாட்டி விடுவார்கள் பெணகள் என நாசா விஞ்ஞானிகள் வேடிக்கையாக பேசி வருகிறார்கள்.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புறப்பட்ட டிஸ்கவரி விண்கலத்தில்
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்காஃப் லிண்டென்பர்கெர் மற்றும் ஸ்டெஃபானி வில்சன், ஜப்பானைச் சேர்ந்த நவோக்கா யமாஸாகி ஆகியோர் விண்வெளிக்கு பயணமானார்கள்.

ஏற்கனவே இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை விண்வெளி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க பெண்மணி டிரேசி கால்ட்வெல் டைசன் தற்போது விண்வெளி நிலையத்தில் உள்ளார்.

இவருடன் சேர்த்து நான்கு பெண்களும் மெஜாரிட்டி பலத்துடன் விண்வெளி நிலைய வேலைகளை கவனிக்கப் போகிறார்கள்.

முடிவு பெறும் நிலையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறுதிகட்டப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

13 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து, பல்வேறு சோதனைகள் மற்றும் பழுது நீக்கும் வேலைகளிலும் இவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரே நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு பெண்கள் தங்குவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
 

ட்ரெஸ் 2 பி புதிய இருள் கிரகம்

வாஷிங்டன்: விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயரும் சூட்டியுள்ளனர்.

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு 'ட்ரெஸ்-2 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இதுவரை கண்டுபிடித்துளள கிரகங்களிலேயே மிகவும கறுப்பான கிரகம் என்றால் அது இந்த ட்ரெஸ் 2 பி-தான். சூரிய ஒளியில் 1 சதவீதத்தை மட்டுமே இந்த கிரகம் பிரதிபலிக்கிறது. இதனால் நிலக்கரியை விட கறுப்பாக இந்தக் கிரகம் காட்சி தருகிறது.

இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த புதிய கிரகம் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது (ஒரு ஒளி ஆண்டு என்பது 6 ட்ரில்லியன் மைல் தூரம் கொண்டது!)

Saturday, September 3, 2011

தமிழர் கடவுளா விநாயகர் ?

"அய்ந்து கரத்தனை ஆனை முகத்தனை" ,என்று மிகத்தொன்மையான நூல்களிலும் தொடக்கபாடலாக திணிக்கபட்டு ,மூல முதல்வன் , கணங்களின் அதிபதி ,என்றும் துதிக்கப்பட்டும் ,இந்திய கடவுள்களிலேயே எல்லா ஆலயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் தமிழரின் கடவுளா ? தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் !  ஆறுமுகம் பன்னிரு கரம் ,என்று தமிழின் வடிவமாகவே உருவகிக்கப்படுகிற முருகனையும்  , தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்பட்ட தென்னிந்திய கடவுளான சிவனையும் இடம் பெயர்த்தி வந்த இந்த விநாயகர் தமிழரின் வாழ்வில் ,பண்டிகையில் ,கலாசார ,பண்பாட்டில் நுழைந்த கதை சற்றே யோசிக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது .பொதுவாகவே இந்தியாவின் வரலாறு மதசண்டைகளின் வரலாறு , முகலாயர் ,ஆங்கிலேயர் , பல்லவர்           களப்பிரர் என்று மாறி மாறி நம்மை பலரும் ஆண்டதால் , அவரவர் ஆட்சியின் போது அவர்கள் திணித்த பண்பாட்டு ,கலாசார திரிபுகளை அப்படியே ஏற்று கடைபிடித்து வருகிறோம் சுயம் மறந்து .இப்பொழுது ஜனநாயகம் வந்த பின் நமக்கான , நாம் தொலைத்த நமது பண்பாடு கலாசாரத்தை கண்டுபிடித்து கடைபிடிக்கவேண்டாமா ? தமிழரின் பண்பாட்டின் மீது திணிக்கப்பட்ட இந்த கணபதி சாளுக்கிய மன்னர்களால் அறிமுகபடுத்தபட்டு மிக லாவகமாக சிவ பார்வதி குடும்பத்தில் திணிக்கப்பட்ட ஒருவர்  , விநாயகர் என்கிற குறியீடு இருக்கும் வரை சாளுக்கிய மன்னர்களின் பண்பாடு , கலாசாரம் ,அவர்களின் நினைவு பாதுகாக்கப்படும் .போதி மரம் எனப்படுகிற அரச மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதின் அடையாளமாய் பிக்குகளால் அரசமர அடிதோறும் புத்தர் சிலைகள் இடம் பெற்றிருந்திருக்கின்றன .அவைகளை புத்தமத அழித்தொழிப்பின் போது இடம்பெயர்த்தி இவ்வினாயகரை அரசமரம்தோறும் இடம்பெற செய்திருக்கிறார்கள் .எப்படி தமிழில் தெலுங்கு கலந்ததால் நாஸ்தா என்கிற வார்த்தை வந்தோ !, தமிழில் சமஸ்கிருதம் கலந்ததால் எப்படி மறைக்காடு வேதாரண்யம் ஆனதோ ?!, முதுகுன்றம் ,விருதாசலம் ஆனதோ அப்படி தமிழக கலாசார பண்பாட்டில் இடை செருகல் வருகிறபோது நமது பண்பாடும் ,கலாச்சாராமும் அழிந்து போகிறது .கி. மு . மூன்றாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை .சங்க காலத்தை அடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் ( கி.பி.இருநூறு முதல் கி.பி ஐநூறு )வரை தமிழகம் தமிழ் மன்னர்களின் கையிலிருந்து நழுவிய நேரத்தில் தான் இது நிகழ்ந்திருக்கிறது .இந்திய பரப்பில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமாக நடத்தபடுகிற இத்தருணத்தில் தமிழ் கடவுள்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம் , இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற , பண்டிகைகளுக்கு உகந்தவராக ,எல்லோராலும்வணங்கப்படுகிற  கணபதியை போல ,தமிழகம் தாண்டி  முருகன் வணங்கப்படுகிறாரா ? அல்லது பண்டிகைகளுக்கு  உகந்தவராகிறாரா ? இல்லையே ? சிவனுக்குபிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேசிய கடவுளாகவும் ,ஒருவர் பிராந்திய கடவுளாகவும் பேதபடுத்தபடுவது ஏனென்று இன்னுமா புரியவில்லை உங்களுக்கு ? தமிழனுக்கும் ,தமிழ் கடவுளுக்கும் ஏனிந்த நிலை என்று தமிழர்களே சிந்திப்போம் , விநாயகர் என்கிற குறி ஈட்டிற்கான பிறந்தநாளை வருடாவருடம் நினைவுபடுத்தி ,கொண்டாடவைத்து ,தன் பண்பாட்டு ,கலாசாரத்தை அணையாமல் பாதுகாத்துவருபவர்களுக்கு தமிழர்கள் தரப்போகும் பதில்தான் என்னோவோ ?

Friday, September 2, 2011

TEOTWAWKI

என்ன தலைப்பை பார்த்து குழம்பி விட்டீர்களா ? எல்லாம் சில குழப்ப வாதிகள் குழப்பி கொண்டிருக்கும் குழப்பலான குழப்பத்தின் சுருக்கம் தான் அது (  THE END OF THE WORLD AS WE KNOW IT ) .என்ன இன்னும் புரியவில்லையா ? உலகம் 2012  டிசம்பர் மாத இறுதியில் அழிந்து விடும் என்கிற ரீல்தான் அது .சூரியப்புயல் , புவி சுழற்சியில் ஏற்ப்பட போகும்  மாற்றம் , மயன் காலேண்டர்  கணக்கு , பிரமிட்  அமைப்பு., நாஸ்டர்டாமஸ்  கணிப்பு  இவைகளை ஒன்றி மதவாதிகளும் , மோடி முஸ்தான்களும் இந்த புனை கதையை பரப்பி மக்களை பீதிக்குலாக்கி வருகிறார்கள் .இதை கேள்விப்பட்ட சினிமா காரர்கள்  THE HAPPENING   என்று ஒரு படம் எடுத்து கல்லா கட்டி விட்டார்கள் .
அறிவியலார்கள் இதற்க்கு சப்பை கட்டுகட்டி கொண்டு வருகின்றனர் .எல்லா பருப்பொருளை சுற்றியும் காந்தபுலம் இருப்பதைப்போல , மிகப்பெரிய பாறை உருண்டையான பூமியை சுற்றியும் காந்த புலம் உள்ளது இது பரிதியில் ஏற்ப்படும் புயல் காரணமாக பூமியின் காந்த புலம் பாதிக்க பட்டு நவீன மின்னணு கருவிகள் , மனிதர்களின் மூளை மின்காந்தம் பாதிக்கப்பட்டு உலக அழிவு இந்த சூரிய சுனாமியால் ஏற்படும் என்று அறியல் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .இந்த மாதிரியான அழிவு புரளி காலம்காலமாய் வந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது . 





நவீன அகோரிகள்




செத்த பிணங்களை உண்ணும் அகோரிகளை போல , நிர்வாண உடலில் உணவை அடுக்கி கூடி நின்று கும்மாளமடிக்கும் , மிருகத்தனமான செயல் ஜப்பான் நாட்டில் ரசனையோடு கூடிய ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு கல்லா கட்டபடுகிறது. ச்சே! இவர்கள் என்ன மனிதர்கள் என்று நம்மை முகம் சுளிக்க வைக்கிறது , பாம்பு ,பூரான் ,பல்லி  திங்கிறவன்  புத்தி இப்படித்தான் இருக்கும் போல ,என்னதான் விலைக்காக விளக்கொளியில்  நிர்வாணமாக படுத்திருந்தாலும் அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நினைத்து பார்பார்களா இந்த கோட்டு சூட்டு போட்ட காட்டு  மிராண்டிகள் ? என்னதான் ஜப்பான் உலகின் மூன்றாவது வல்லரசென்றாலும் ,பெண்களையும் , வாழ்க்கையையும் வியாபாரமாக பார்க்கும் இவர்களை என்ன சொல்ல !!!!!!!!?




Thursday, September 1, 2011

அலைபேசிகளை ஆளும் ஆண்ட்ராயிட் (android)

உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட அலைபேசிகளை(cell phone) தயாரிக்கக பன்னாட்டு நிறுவனங்கள் போட்டபோட்டியில் இருக்கின்றன .இன்றளவும் கோலோச்சி கொண்டிருக்கிற  நோக்கியா நிறுவனத்தை ஓரங்கட்ட சாம்சுங் ,சோனி ,எல்ஜி, மோட்டோரோலா போன்ற நிறுவனகள் எத்தனையோ உத்தியை கையாண்டு வருகின்றன .இயங்குதள ( operating system ) புரட்சி ஏற்படுத்த கூகிள் "ஆண்ட்ராயிட்" இயங்குதளத்தை அறிமுகம் செய்து அலை பேசி சந்தையை தன்பக்கம் இழுத்து கொண்டிருக்கிறது .ஆண்ட்ராயிட் இயங்குதள அலைபேசிகள் ஒரு கணினியை போலவே செயல்படுகின்றன என்பதால் வெகு மக்களால் விரும்பப்படுகிறது ,மேலும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதளத்திற்கு பல ஆயிரம் மென்பொருள்களையும்( softwares ) அறிமுகம் செய்திருக்கிறது .உலக அளவில் மென் பொருள் துறையில் தலைமை பண்பேற்று சாதித்து வரும் நம் தமிழ் மென் பொருள் வல்லுனர்கள் முடிந்த அளவு ஆண்ட்ராயிட் இயங்குதளத்தில் தமிழ் மென் பொருளை இணைத்துள்ளனர் அவற்றில் சில இங்கு காண்போம் .

1.தமிழ்விசை  ( Thamizh type writting )
திரு.முகுந்த் அவர்கள் தலைமையிலான "தமிழா "மென்பொருட்கள் குழுவில் உள்ள குரு.ஜெகதீஷ் அவர்கள் உருவாக்கியுள்ள  மென்பொருள்  அலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லை என்ற தமிழ் ஆர்வலர்களின் குறையை நீக்கியுள்ளது.
      இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஆன்டிராய்டில் நேரடியாக தமிழ் மொழிக்கு சேவை வழங்கப்படவில்லை எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்தவற்றை டிஸ்கி(tscii) வழியாக காட்டச்செய்து, யுனிகோடில் பதிவு செய்கிறார்கள்.இது ஒரு மிக முக்கியமான அம்சம். ஒபேராவில் உலாவினால் தமிழ் தட்டச்சு செய்வதும், தமிழில் படிப்பதும் சாத்தியமே....கணினியே தேவையில்லாமல் நேரடியாக ஆன்டிராய்டு வழியாக மின்உலகில் வலம்வரலாம்....தமிழ் விசையின் உதவியுடன் . இலவசம். பொன்னியின் செல்வன் மின் நூலாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளனர் , இன்னும் பல தமிழ் நூல்கள் பதிவேற்ற தயாராக உள்ளன .
2  கூகிள் மேப்  ( Google Maps)
தொழில் நுட்ப்பத்தின் மகுடம் இந்த கூகிள் மேப் , உலகத்தில் எந்த மூலையில்  இருந்தாலும்  இப்ப்பொழுது  எங்கே இருக்கிறோம் , எந்த முகவரிக்கு போகவேண்டுமோ  அங்கே எப்படி போவது , நடந்து சென்றால் எத்தனை தூரம் , கார் , பஸ் ,ட்ரைன் இவைகளில்  சென்றால் எவளவு தூரம்  எந்த திசை என்றெல்லாம் நமக்கு மிகப்பெரும் வழிகாட்டியாக திகழ்கிறது ..

3.ஆன்டிராய்டு பூஸ்டர் 
உங்கள் ஆன்டிராய்டு அடிப்படையிலான மொபைலை மிகச்சிறப்பாக இயங்க வைக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். ஏனெனில் ஆன்டிராய்டு இயங்குவது இயங்குதளத்தின் அடிப்படையில் என்பதால் முதன்மை நினைவகத்தினை அவ்வப்போது தேவையில்லாத மென்பொருளை வெளியேற்றி நினைவகத்தினை சிறப்பாக மேலாண்மை செய்வதால் மென்பொருள்களும் சிறப்பாக இயங்குகின்றன.
4.நெட்குயின் பாதுகாப்பு மென்பொருள்
இம்மென்பொருள் மிகச்சிறப்பான பாதுகாப்பு மென்பொருள். இந்த மென்பொருளில் ஆன்டிவைரஸ், பயர்வால் மற்றும் ஆன்டிராய்டில் உள்ள நமது அலைபேசி எண்களை பேக் ப் எடுக்கவும் வசதிஉள்ளது. மேலும் நம் அலைபேசி எங்கேனும் தொலையும் பட்சத்தில் இதில் உள்ள mobile antilost வழியாக எளிதில் கண்டறியலாம். மேலும் மெமரியையும்(முதன்மை நினைவகம்-RAM ) அதிகமாக எடுத்துக்கொள்ளாது.
5. பரிமாற்றங்கள்
இரு நண்பர்களுக்குள் தாங்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் பைல்கள் ஆகியவற்றை ஆகியவற்றை வெகு எளிதாக பரிமாற்ற இரு மொபைல்களையும் கிட்டே வைத்தாலே அவற்றை பரிமாற்றிட உதவும் மென்பொருள்.

உலகின்  கலை களஞ்சியம் ,எல்லாம் தெரிந்தவர் ,கூகிள் ஆண்டவர் என்றெல்லாம் இனைய பயன்பாட்டாலர்களால் போற்றப்படும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதள மென்பொருட்களை இலவசமாகவே அறிமுகப்படுத்தி உலகத்தை தன் வசபடுத்தி ஆட்சி செய்கிறதென்றால் அது மிகையில்லை .