Friday, September 2, 2011

TEOTWAWKI

என்ன தலைப்பை பார்த்து குழம்பி விட்டீர்களா ? எல்லாம் சில குழப்ப வாதிகள் குழப்பி கொண்டிருக்கும் குழப்பலான குழப்பத்தின் சுருக்கம் தான் அது (  THE END OF THE WORLD AS WE KNOW IT ) .என்ன இன்னும் புரியவில்லையா ? உலகம் 2012  டிசம்பர் மாத இறுதியில் அழிந்து விடும் என்கிற ரீல்தான் அது .சூரியப்புயல் , புவி சுழற்சியில் ஏற்ப்பட போகும்  மாற்றம் , மயன் காலேண்டர்  கணக்கு , பிரமிட்  அமைப்பு., நாஸ்டர்டாமஸ்  கணிப்பு  இவைகளை ஒன்றி மதவாதிகளும் , மோடி முஸ்தான்களும் இந்த புனை கதையை பரப்பி மக்களை பீதிக்குலாக்கி வருகிறார்கள் .இதை கேள்விப்பட்ட சினிமா காரர்கள்  THE HAPPENING   என்று ஒரு படம் எடுத்து கல்லா கட்டி விட்டார்கள் .
அறிவியலார்கள் இதற்க்கு சப்பை கட்டுகட்டி கொண்டு வருகின்றனர் .எல்லா பருப்பொருளை சுற்றியும் காந்தபுலம் இருப்பதைப்போல , மிகப்பெரிய பாறை உருண்டையான பூமியை சுற்றியும் காந்த புலம் உள்ளது இது பரிதியில் ஏற்ப்படும் புயல் காரணமாக பூமியின் காந்த புலம் பாதிக்க பட்டு நவீன மின்னணு கருவிகள் , மனிதர்களின் மூளை மின்காந்தம் பாதிக்கப்பட்டு உலக அழிவு இந்த சூரிய சுனாமியால் ஏற்படும் என்று அறியல் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .இந்த மாதிரியான அழிவு புரளி காலம்காலமாய் வந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது . 





No comments:

Post a Comment