Monday, October 11, 2010

எங்களோடு ஏன் வந்தாய் ?


எங்களோடு ஏன் வந்தாய் ?
எருமை மாடே !
கருப்பென்றாலே வெறுப்பாயிற்றே- அவாளுக்கு
அவாளோடு வந்ததினால்
இடபாகன் வாகனமாயும்
கோமாதாவாகியும் வணங்கபடுகிறதே
அந்த வெள்ளை நிற பசுவும் .
பசு வதைனு துடிக்கிறவன்
பல்லாயிர கணக்கில் பக்தியின் பெயரால்
பலியிடப்படுகிற உங்களை பத்தி யோசிச்சு இருப்பானா ?
எமனின் வாகனும்னு தள்ளிதான் வச்சிருபானா ?
ச்சே ! எங்களோடு ஏன் வந்தாய் எருமை மாடே ?!

No comments:

Post a Comment