Wednesday, October 27, 2010

அருந்ததி ராய் மீது வழக்கு ,கைதும் செய்யப்படலாம்


தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

'கஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும்' என தில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே தேச விரோதமாகப் பேசியதாக கஷ்மீர் மாநில ஹுரியத் மாநாட்டு தீவிரப் பிரிவுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் அண்மையில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்டு ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

காஷ்மீர் ஒருபோதும் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் இதுவே வரலாற்று உண்மை என்றும், இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பிரிட்டிசாரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா காலணியாதிக்க சக்தியாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அருந்ததி ராய் ஆற்றிய உரை சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்


அங்கு தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான எத்தனிப்புகளை அரசு மேற்கொண்டவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருந்ததி ராய்க்கு இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக புத்தகம் மற்றும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகவும் மேடைகளில் பேசியிருந்தார்.

அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து தில்லி போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

அருந்ததி ராய் மீது மேற்கொள்ளப்படும் அரசின் எந்த எதிர் நடவடிக்கைக்கும் எதிராக குரல் கொடுக்க நாம் தயாராக இருப்போம் தோழர்களே!

No comments:

Post a Comment